TECHNOLOGY

கொரோனா நிவாரண நிதி 2000 கிடையாது

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட 2000 ரூபாய் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடு அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் அறிவிக்கப்பட்டது. அந்த நிதியில் முதலில் ரூ.2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.

இதில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரண நிதி கிடையாது என அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டுகளை விரைந்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button