SOCIAL

புதுச்சேரியில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

புதுச்சேரியில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5,317 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .அவர்களில் 90 பேருக்கு கொரோனா உறுதியானது.

தற்போது 189 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 790 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 82 பேர் குணமடைந்தனர்.

காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் 62 வயது மூதாட்டி பலியானார் இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,793 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97.71 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது. அதேசமயம் ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை தொடர்ந்து சிகிச்சையில் உள்ளது.

நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என தலா 4 பேரும், பொதுமக்கள் 4,707 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதுவரை 6,96,624 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button