SOCIAL

தமிழகத்தில் முழு ஊரடங்கு ரத்து. ரயில்கள் சேவை வழக்கம் போல் இயங்கும்..!

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது போக்குவரத்தின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை குறைந்த அளவில் இயக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இனி வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button