SOCIAL

நாளை முதல் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்..!

கொரோனா மூன்றாம் அலை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

நாளை முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள் சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தற்போது கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறையை தொடரும். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

பேருந்துகள் போக்குவரத்து புறநகர் ரயில்கள் 100% பயணிகளுடன் இயங்க அனுமதி ரயில் பயணிகளுக்கு தடுப்பூசி சான்று தேவையில்லை. 1 முதல் 12ம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறப்பு.

கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழிபாட்டுத் தலங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி. உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகளில் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி. கடற்கரைக்கு செல்ல அனுமதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button