SOCIAL
தடுப்பூசி போட்டவர்களுக்கு மதுபானம்.. அரசு உத்தரவு..!
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்து இந்திய அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விரைவில் 3வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் முதல்வர் பினராஜி விஜயன் தலைமையிலான கேரள மாநிலத்தில, மதுக்கடைகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அரசு பிறப்பித்த உத்தரவில், கொரோனா முதல் டோஸ் தடுப்புசி போட்டவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து ஒரு மாதத்திற்கு மேலானவர்கள் மட்டுமே மதுகடைகளுக்கு சென்று மது வாங்க செல்ல வேண்டும் என கூறியுள்ளது.