WORLD
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் முடக்கம் எதற்காக..?
நேற்று இரவு வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதற்கிடையே பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சேவையை முடக்கத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது.
விரைந்து இதை சரி செய்வோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய பயனாளிகளிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை இன்று அதிகாலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது 6 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்கு ஆளாகினர்.
அதுமட்டுமில்லாமல் இந்த முடக்கத்தால் பயனாளர்கள் அனைவரும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர். நேற்று மற்றும் டெலிகிராம் உபயோகிப்பவர் சேவை அதிகரித்துள்ளது.