CINEMA
நேரில் சென்று ரஜினிகாந்தின் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம் நேற்றைய தினம் தலைசுற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளை செல்லும் நரம்பில் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டது என்பதை அவருக்கு சிகிச்சை முடிந்தது. அவர் தற்போது குணமடைந்து விட்டதாகவும் நாளை அல்லது அதற்கு மறுநாள் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் அறிவித்த பின்னர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.