CINEMA
நடுக்கடலில் போதைப்பொருள் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது..?
இந்தியாவில் முதல் உல்லாச கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனையில் இறங்கினர். சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் தடைசெய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல பாலிவுட் நடிகர் மகனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எனவும் அவரது மகன் ஆர்யன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் 13 பேரையும் பிடித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.