WORLD
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் 37 லட்சம் நிதி ஆக்சிஜன் வாங்க வழங்கினார்
ஆக்சிஜன் வாங்க 37 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில் கொல்கட்டா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ். கொரோனா பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 37 லட்சம் ரூபாய் வழங்கினார்.
மற்ற ஐபிஎல் வீரர்களையும் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி உள்ளார் கம்மின்ஸ். இவர் ஐபிஎல் ஏலத்தில் கொல்கட்டா ஆணியால் 15.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ட்விட்டரில் கம்மின்ஸ் வெளியிட்ட செய்தியில் பல ஆண்டுகளாக நேசித்த நாடு இந்தியா இங்குள்ளவர்கள் மிகவும் அன்பானவர்கள் இவர்களில் பலர் குர்ஆனோ தோற்றால் துன்பங்களை அனுபவிப்பது வேதனை அளிக்கிறது என்று சொல்கிறார்.
இவரைப் போலவே மற்ற வீரர்களும் முடிந்த அளவு அவர்களின் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என கம்மின்ஸ் தெரிவித்திருந்தார்.
இவரைப்போல இந்திய கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் என்பது அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.