SOCIAL
போகிப் பண்டிகையை வரவேற்கும் தமிழர்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த தினத்தில் வீட்டில் உள்ள பழைய பொருள்களை வீட்டின் வெளியே போட்டு எரித்து கொண்டாடுவது தமிழர்கள் வழக்கமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த வகையில் நாளை தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வைத்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வைத்து எடுத்தால் சென்னை நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.